மும்பை: நடந்து முடிந்த 15-வது ஐபிஎல் சீசனில் அதிவேக பந்துகளாக வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தினார் இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக். இப்போது இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் களத்தில் விளையாடவுள்ளார்.
இந்த நிலையில் தனது ரோல் மாடல் யார்? யார்? என்பது குறித்து மனம் திறந்துள்ளார் அவர். சராசரியாக மணிக்கு 150+ கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசும் திறன் படைத்தவர் உம்ரான். இந்த சீசனில் 14 போட்டிகளில் விளையாடி 22 விக்கெட்களை வீழ்த்தினார். அதோடு வளர்ந்து வரும் வீரருக்கான விருதையும் அவர் வென்றுள்ளார். அவருக்கு 22 வயது தான் ஆகிறது.